188 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2
152.
தாரகை போலும் தலைத் தலை மாலை
தழல் அரப் பூண்
வீர என்தன்னை விடுதி கண்டாய்
விடின் என்னை மிக்கார்
ஆர் அடியான் என்னின் உத்தரகோச
மங்கைக்கு அரசின்
சீர் அடியார் அடியான் என்று
நின்னைச் சிரிப்பிப்பனே 48
தாரகை-நக்ஷத்திரம். சிரிப்பிப்பன்-நகைக்கும்படி செய்வேன். ‘விண்மீன்களைப்போன்ற கபாலங்களையும், தழல் போன்ற கொடிய பாம்புகளையும் அணிந்த வீரனே' பயித்தியக்காரன்போல் திரியும் என்னைப் பார்த்து, நீ யாருடைய அடியவர் என்று பெரியோர்கள் 'மிக்கார்' கேட்டால், திருஉத்தரகோசமங்கையில் உள்ள சிவபெருமானின் அடியவர்கட்கு அடியவன் என்று நான் சொன்னவுடன் அவர்கள் சிரிப்பார்கள்’.
‘உன் அடியவனாகிய நான் இந்த நிலையில் இருப்பது உனக்குத்தான் அவமானம். ஆகவே, அவர்கள் சிரிப்பதற்கு நான் காரணமாக இருப்பேன்’ என்றவாறு.
153.
சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பை
தொழும்பையும் ஈசற்கு என்று
விரிப்பிப்பன் என்னை விடுதி கண்டாய்
விடின் வெம் கரியின்
உரிப் பிச்சன் தோல் உடைப் பிச்சன் நஞ்சு
ஊண் பிச்சன் ஊர்ச் சுடுகாட்டு
எரிப் பிச்சன் என்னையும் ஆளுடைப்
பிச்சன் என்று ஏசுவனே 49
கரியின் உரிப்பிச்சன்-யானைத்தோலைப் போர்த்திய பித்தன். தோலுடைப் பிச்சன்-புலித்தோலை உடுத்த பித்தன். நஞ்சு ஊண் -நஞ்சாகிய உணவு.