பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம் * 189



முந்தைய பாட்டில் 'சிரிப்பிப்பன்’ என்று கூறியவர் அதைக் கேட்டு நாணித் தனக்கு அருள்செய்வான் என்று கருதினார். அது நடைபெறவில்லை ஆதலின் உன்னை நேரடியாக ஏசுவேன் என்று மனக்குமுறலை வெளியிடுகின்றார்.

‘ஐயனே! என்னை விட்டுவிடுவாயேயானால் நான் என்ன செய்வேன் தெரியுமா? திருப்பெருந்துறையில் பலருங் காண என்னை ஏற்றுக்கொண்டு, பின்னர் வெறுத்து ஒதுக்கினாய். இப்பிழையைப் பலருக் கேட்கச் சொல்லிச் சிரிப்பிப்பேன்'.

‘என்னுடைய அடிமைத்திறம் முழுவதும், என் பணி முழுவதும் ஈசனுக்குத்தான் என்று சொல்வேனேயானால், அதைக் கேட்பவர்கள் அப்படியிருந்தும் “உன் நிலை இப்படி உள்ளதே” என்று சொல்லி, என்னைப் பணிகொண்ட உன்னைத்தான் எள்ளிச் சிரிப்பார்கள்’.

'இத்தோடு நில்லாமல் யானைத் தோலைப் போர்வையாகப் போர்த்த பயித்தியக்காரன்; புலித்தோலை அணியும் பயித்தியக்காரன்; நஞ்சையே உணவாகக் கொள்ளும் பயித்தியக்காரன், ஊர்ச் சுடுகாட்டில் எரியின் இடைநின்று ஆடும் பயித்தியக்காரனாகிய இவன்தான் என்னையும் ஆண்டுகொண்டான் என்று ஊரறிய உன்னை ஏசுவேன்’ என்கிறார்.

154.

ஏசினும் யான் உன்னை ஏத்தினும்
      என் பிழைக்கே குழைந்து
வேசறுவேனை விடுதி கண்டாய்
      செம் பவள வெற்பின்
தேசு உடையாய் என்னை ஆளுடையாய்
      சிற்றுயிர்க்கு இரங்கிக்
காய் சின ஆலம் உண்டாய் அமுது
     உண்ணக் கடையவனே 50