பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 திருமாலும் நான்முகனும் பூமியில் வந்து பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு மற்றொரு காரணமும் உண்டு. ஒரு காலத்தில் அவர்கள் எதிரே நின்ற தீத்துணின் அடி முடி காண முற்பட்டுத் தோற்றார்கள் அல்லவா? அப்படிப்பட்டவர்கள் இந்தப் பூமியைப் பொறுத்தமட்டில் ஒர் அதிசயத்தைக் கண்டனர். தாங்கள் யாரைத் தேடிச் சென்றார்களோ அவன் இதோ புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறான். இது என்ன அதிசயம்! அவனியிலிருந்து புறப்பட்ட ஒன்று அவனுக்கு முன்னர் வெகு வேகமாக வந்துகொண்டிருக்கிறதே! அது யாது? சற்று நின்று நிதானித்தவுடன் ஒன்று விளங்கிவிட்டது. தாங்கள் தேட முயன்ற தலைவன்தான் இந்தப் பூமிக்கு வந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு முன்னர்க் கட்டியம் கூறுவதுபோல வருகின்ற அது யாது? கூர்ந்து நோக்கினவுடன் தெரிந்துவிட்டது. ஆம்! உயிர்களை உய்யக் கொள்ளவேண்டும் என்ற அந்தப் பெருமானின் அளப்பருங் கருணைதான் அவனுக்கு முன்னர் வந்து கொண்டிருக் கிறது. மெய்க்கருணையும் நீயும் அவனியிற் புகுந்து எமை ஆட் கொள்ள வல்லாய் என்று அடிகளார் கூறுவது இதனையே ஆகும். శ్రీ) ওঁ০ శ్రు