பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 துறையில் எனக்குக் குருவருள் என்ற பிரைமோர் இடப்பட்டு விட்டது. ஆனாலும் வெண்ணெய், தோன்றியும் தோன்றாமலும் இருக்கும் இளந்தயிர் போல நீ இப்போது வெளிப்பட்டும் வெளிப்படாமலும் இருக்கின்றாய். அதாவது சில சமயங்களில் நீ வெளிப்பட்டு அருள்செய்வதை என்னால் உணரமுடிகின்றது. பிரையிடப்பட்ட பாலில் சில இடங்களில் வெண்ணெய் வெளிப்பட்டது போன்றதாகும் இது. அதே பாலில் சில பகுதிகளில் வெண்ணெய் வெளிப் படாது நிற்பதுபோலச் சில நேரங்களில் நீ வெளிப்பட்டு அருள்செய்யாமல் இருக்கின்றாய் என்றவாறு. 383. ஏசா நிற்பர் என்னை உனக்கு அடியான் என்று பிறர் எல்லாம் பேசா நிற்பர் யான் தானும் பேனா நிற்பேன் நின் அருளே தேசா நேசர் சூழ்ந்து இருக்கும் திருவோலக்கம் சேவிக்க ஈசா பொன்னம்பலத்து ஆடும் எந்தாய் இனித்தான் இரங்காயே 6 பேணாநிற்பேன்-விரும்புவேன். தேசா-ஒளியுடையவனே. நேசர்அனபா. - 'பெருமானே! நான் நின் திருவருள் ஒன்றையே நம்பி அதைப் போற்றி நிற்கின்றேன். அதனை அறிந்தோ, அறியாமலோ உலகத்தார் எல்லாம் நான் உன் அடியவன் என்று பேசுகிறார்கள். இந்த நிலையில் நின் திருவருள் கைகூடாமல் நான் அல்லலுறத் தொடங்கினால் உலகத்தார் நம் இருவரையுமே ஏசுவார்கள். இவ்வளவு சிறந்த அடியானாக ஒருவன் இருந்தும், அவன் துயர்துடைக்க நீ முன்வரவில்லை என்று உன்னை ஏசுவார்கள். இவன் துயரைக்கூடத் துடைக்காத ஒருவனுடைய திருவருள் வேண்டுமென்று இவன் ஏன் காத்து நிற்கின்றான் என்று என்னை ஏசுவார்கள்.