பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 என்று பாடுவதால் இந்நிகழ்ச்சியே அடிகளார் மனத்தில் பெரியதோர் இடத்தைப் பிடித்திருந்தது என்பதை அறியமுடிகிறது. - 428. வைப்பு மாடு என்றும் மாணிக்கத்து ஒளி என்றும் மனத்திடை உருகாதே செப்பு நேர் முலை மடவரலியார் தங்கள் திறத்திடை நைவேனை ஒப்பு இலாதன உவமனில் இறந்தன ஒள் மலர்த் திருப் பாதத்து அப்பன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே 1 ஒப்பிலாதனவும் உவமை கூறமுடியாதனவும் ஆகிய திருவடிகளை உடைய இறைவனைச் சேமநிதி யென்றும் மாணிக்கம் என்றும் கருதி, இம்மனம் உருகியிருக்க வேண்டும். அவ்வாறு உருகாமல், அந்த மனம் மடவரலியர் பால் உருகிக் காலத்தைக் கழித்தது. அதுபற்றிக் கவலை கொள்ளாமல், பெருந்துறை நாயகன், பிடித்து ஆண்டு கொண்டதோடு அல்லாமல் அடியார் கூட்டத்திடை இருக்கச் செய்தான். இத்தகைய ஒர் அதிசயத்தைக் எங்கேனும் கண்டதுண்டோ என்றவாறு, 429. நீதி ஆவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பவரொடும் கூடேன் ஏதமே பிறந்து இறந்து உழல்வேன்தனை என் அடியான் என்று பாதி மாதொடும் கூடிய பரம்பரன் நிரந்தரமாய் நின்ற ஆதி ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே - 2