பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசயப் பத்து 65 'முதலில் அவர்கள் புகழ்ந்தனர்; ஆனால் எனக்கு இறுதியில் கிடைத்திருக்கக் கூடியது கடுநரகம். இப்பொழுது உலகவர் என்னைப் பைத்தியம் என்று ஏசினர்; ஆனால் எனக்குக் கிடைத்தது அடியார் கூட்டத்திடையிருக்கும் வாய்ப்பு'என்றவாறு. 432. பரவுவார் அவர் பாடு சென்று அணைகிலேன் பல் மலர் பறித்து ஏத்தேன் குரவு வார் குழலார் திறத்தே நின்று குடி கெடுகின்றேனை இரவு நின்று எரி ஆடிய எம் இறை எரி சடை மிளிர்கின்ற அரவன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே 5 'ஓயாது இறைவனைப் பரவுகின்றவர்களை நாடிச் சென்று அவர்களோடு வாழ்ந்தேனில்லை. அதுதான் இல்லையென்றாலும் நானாகவாவது மலரைப் பறித்து, அவன் திருவடிகளில் இட்டு வழிபட்டேனும் இல்லை. இவை இரண்டும் செய்யாதது மட்டுமல்ல இறை வழிபாட்டில் ஈடுபடவேண்டிய நேரத்தில் மகளிரோடு என் பொழுதைக் கழித்தேன். அப்படியிருந்தும் இரவில் இடுகாட்டிடை ஆடும் தலைவன் எனை ஆண்டு அடியரிற் கூட்டினான்’ என்றபடி 433. எண்ணிலேன் திருநாமம் அஞ்சு எழுத்தும் என் ஏழைமை அதனாலே நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு நல்வினை நயவாதே மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை அண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே 6