பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 * பொழிப்புரை - த கோவேந்தன்

ளையும் பிற அண்டங்களையும் உருவாகுமாறு கட்டினாய் முதன்மை உடையவனே!

செழிய மலர்த் தடாகங்கள் பொருந்திய புதுவைப் பெருமாட்டி நீ சிற்றிலைக் கட்டி விளையாடுக தென்ஆரங்கேசன்முதல் ஐவரும் குடிபுகச் சின்ன வீட்டினைக் கட்டி விளையாடுக

புற்றுஇடைப் பிறவாத பல்தலைக் கணபனப்

பொறி அரா வைத்தகற் றைப் புரிசடைச் சிவன் அயன் பாகசா தனன் அமரர்

பொன்மேரு வலமதா கச்

சுற்றிடைப் புவலோக மிசை.உதித்து எழுசந்த்ர

சூரியர் குழாத்தினோ டும்

தும்பையில் கொண்டிஎன்று இவ்வுலகில் ஆசைத்

தொடக்கு அறத்துஅவ் வுலகை யே

பற்று இடைக் குலமகட்கு ஒலையை அளித்து அரிய

பரமபதம் எளிது.அளிக் கும்

பரமஞா னக்கோயில் அண்ணன்முத வியமுதல்வர்

பரவு திரு முன்றிலுடனே

சிற்றிடைக்கு இடர்இழைத்து எழுமுலைப் பெண்ணரசி

சிற்றிலை இழைத்தருள்க வே!

தென்னரங் கேசன்முதல் ஐவரும் குடிபுகச்

சிற்றிலை இழைத்தருள்க வே. (87)

பொதுவாக பாம்புகள் புற்றில்தான்் பிறக்கும். ஆனால் சில பாம்பு கள் மட்டும் புற்றிடைப்பிறவாதன; பலதலைகளையுடைய படக் கூட்டத்தில் புள்ளிகளையுடையன. அந்தப் பாம்புகளைக் கற்றையாகிய சடையிலே வைத்த சிவனும், இந்திரனும் அமரரும் சுழலுகின்ற இடத்தை யுடைய வானுலகில் உதித்து எழுகின்ற கதிர்மதிகளின் கூட்டத்தினோடும் கறவைப்பசுசெல்வம் மிக்கவள் என்று கூறும் படி பசுச் செல்வம் மிகப் பெற்றிருந்தும், இவ்வுலகில் ஆசையின் பற்று அறுத்து, அவ்வுலகாகிய பொன்னுலக நாட்டையே விரும்பிய ஓர் ஆய்ச்சிக்கு ஒர் ஒலை எழுதிக் கொடுத்துப் பெறுதற்கரிய துறக்கம் (பரமபதம்) எளிதாக அளித்த முழுநிறைஅறிவனாபூரண ஞானியாகியகோயில்அண்ணன்எம்பெருமானார்) முதலிய முதல்வர்கள் வந்து புகழ்கின்ற வாசலுடன் சிறிய வீடு கட்டி விளையாடு!