பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தடாதகைப் பிராட்டி திருவவதாரப் படலம்

35


"வேதமுடிமேல் ஆனந்த உருவாய் நிறைந்து, வினளயாடு மாதரரசே 'முத்தநகை மானே, இமயமட மயிலே
மாதர் இமவான் தேவி மணிவடம் தோய் மார்பும் தடந்தோளும்
பாதமலர் சேப்புற மிதித்து விளையாட்டயரும் பரிசு என்னே!"

மீனாட்சி அம்மையைச் சிறு குழந்தையாக்கி உருவகித்துப் பாடிய பாடல் நெஞ்சை உருக்கும் தன்மையதாக விளங்கியது. தெய்வக் கோயிலில் குடி கொண்டிருந்த மீனாட்சியே குழந்தை வடிவாக அவள் முன் நின்று தவழ்ந்து விளையாடினாள். மூன்று வயது சிறுமியாக அவள் முன் காட்சி அளித்தாள்.

யாழினும் இனிய குரலில் அவள் இசைத்த பாட்டுக்கு உருகி நேரே வந்து காட்சி அளித்து அக்குழந்தை சிரித்து விளையாடி அவள் சிந்தனை யாது என்று கேட்டது. வந்தனை செய்து வழிபட்ட வித்தியாவதி என்னும் அக்காந்தருவப் பெண் மீனாட்சி அம்மையைத் தனக்கு மகளாகப் பிறந்து மகிழ்வளிக்க வேண்டும் என்று வேண்டினாள்.

அவ்வாறே வரம் கொடுத்து வாழ்த்தி அனுப்பினாள். அந்த வித்தியாவதியே காஞ்சனமாலையாகப் பிறந்து பாண்டியன் மலையத்துவசனை மணந்து தடாதகைப் பிராட்டியை மகளாகப் பெற்று உயர்பேறு பெற்றாள் என்பது கதை. இக்கதையை அகத்தியர் ஏனைய முனிவர்க்கு எடுத்து உரைத்து விளக்கம் தந்தார் என்று கூறப்படுகிறது.

5 . திருமணப்படலம் உலகம்

ஈன்ற தாயாகிய உமையம்மை இளங்குழவியாகித் தடாதகைப் பிராட்டி என்ற பெயரோடு அரசு