17. மழையே பெய்
பெண்களெல்லாம் சேர்ந்து இப்போது மழை பெய்ய வேண்டுமென்று வேண்டிக் கொள்கிருர்கள். அப்படி வேண்டும் போது மழை பெய்வதற்குரிய அறிகுறிகளுக் கெல்லாம் அம்பிகையின் அங்கங்களை உவமையாகச் சொல் கிரு.ர்கள். - -
முதலில் இந்தக் கடவில் நீரை மொண்டு @5ಒ75 கருங்கச் செய்து மேலே எழுந்து வானத்தில் மேகங்கள் சென்று பரவுகின்றன. -
முன்இக் கடலைச் சுருக்கி எழுந்து.
எழுந்து பரவிய மேகங்கள் நீல நிறம் உடையனவாய் அம்பிகையின் திருமேனியைப் போலத் தோற்றம் அளிக் கின்றன.
உடையாள் என்னத் திகழ்ந்து.
"பின்பு மேகங்கள் மின்னுகின்றன. அந்த மின்னல் எம்மைத் தொண்டர்களாகக் கொண்டு ஆளும் அம்பிகை யின் சிறுகிய இடையைப் போல மின்னி விளங்குகின்றன.”
எம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்து.
- "அந்த மேகங்கள் முழங்குகின்றன. அந்த فة 3 ميمن எம்பிராட்டியாகிய அம்பிகையின் திருவடியில் அணிந்துள்ள பொன்னலாகிய அழகிய சிலம்புகள் ஒலிப்பது போல ஒலிக் கின்றன." - - . . . . . . . . . .