பக்கம்:திருவெம்பாவை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. பூம்புனல் பாய்ந்து ஆடுவோம்

பெண்கள் எல்லாம் இப்போது நீராடப் போகிருர்கள். இறைவனைப் புகழ்ந்து பாடி நலம் பெற்று நீராட வேண்டு. மென்று சொல்கிருர்கள். பூந்தாது உடைய கரிய குழலேப் பெற்ற பெண்ணே என்று ஒருத்தி மற்ருெருத்தியை விளிக் கிருள். - - - -

கொங்குண் கருங்குழலி!

'இறைவன் யாவருக்கும் பொதுவாக அருள்செய்தாலும் தன்னுடைய அன்பர்களுக்குச் சிறப்பான இன்பத்தைத் தரு கிருன். சிவந்த கண்ணே உடைய புண்டரீகாட்சனகிய திருமாலிடத்திலும் , நான்கு திசைகளிலும் முகங்களையுடைய பிரமணிடத்திலும், மற்றத் தேவர்களிடத்திலும்,வேறு எந்த இடத்திலும் இல்லாததாகிய ஒரு பெரிய இன்பம் நம்மிடத் தில் உண்டாகும்படியாகச் செய்கின்ருன் இறைவன்.' -

செங்கண் அவன்பால், திசைமுகன்யால் தேவர்கள்பால் எங்கும் இலாததோர் இன்பமநம் பாலதா. "நம்முடைய குற்றங்களை எல்லாம் போக்கி, தான் இருக்கும் இடத்திலிருந்து இங்கே எழுந்தருளி, நம்முடைய வீடுகள்தோறும் வந்து அருள் செய்கிருன்.” . . . . . . -

நந்தம்மைக் கோதாட்டி இங்குகம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி. "நாம் அவனைத் தேடிச் செல்லாமல் அவனே தன்னுடைய செங்கமலமும் பொன்னும் போன்ற திருவடிகளைத் தந்து அருளுகின்ற வீரம் உடையவன் அவன்.' -

செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/82&oldid=579275" இலிருந்து மீள்விக்கப்பட்டது