இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
144
144
இங்ஙனம் இடைக்கால இலக்கியத்தில் திருவேங் கடம் புகழும் பொலிவும் பெற்றுத் திகழ்கின்றது. திரு வேங்கடமுடையானும் பக்தர்கள் கூட்டத்தைப் பெருக் கிக் கொள்ளுகின்ருன். இராமாநுசர் அனந்தாழ்வான யனுப்பி தந்தவனம் அமைத்தல், குளம் வெட்டல் போன்ற கைங்கரியம் செய்வித்ததும், பின்னர் தாமே திருமலைக்கு எழுந்தருளிக் கோயில் வழிபாட்டு முறையை வகுத்ததுமான செயல்கள் திருமலையின் புகழும் திருவேங் கடமுடையானின் சிறப்பும் எட்டுத் திசைகளிலும் பரவு வதற்கு ஏதுக்களாக அமைகின்றன. இதல்ை திருவேங் கடம் தலயாத்திரிகர்களின் சிறப்பான இடமாக அமைந்து விடுகின்றது; பக்தி இயக்கமும் இதனை மேலும் சிறப்பாக்குகின்றது என்று கூறி இன்றைய பொழி வினைத் தலைக்கட்டுகின்றேன். வணக்கம். /