பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19


19 முடைய சமயப் பொது நோக்கைப் புலப்படுத்திக் கொள்வதற்காகவே இதனைச் சேர்த்திருப்பார் என்று கொள்வதற்கில்லை; அப்படிக் கொண்டாலும் திருவ ரங்கம் என்ற வைணவ தலத்தைக் குறிப்பிடுவதனலேயே அக் குறிக்கோள் நிறைவுபெற்று விடாதன்ருே? என்று மேலும் வற்புறுத்திக் கூறிச் செல்லுகின்ருர் அந்த அறிஞர். அதே கட்டுரையில், திருவரங்கத்தை வருணிக்கும் பகுதியில், ஈற்றடியாகிய "திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்' என்பதிலுள்ள உம்மையை நீக்கியும், திரு வேங்கடம் அங்கெழுந்தருளியுள்ள மூர்த்தி இவற்றின் வருணனையை முற்றிலும் நீக்கியும் படித்தால், 40 திருவமர் மார்பன் கிடந்த வண்ணம் 52 என்கண் காட்டென்று என்உளம் கவற்ற 53 வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன் என்பதாக அமைந்து, பொருளும் பாட்டின் அமைப்பும் கெடாது பொருந்தும் என்று கூறி, திருவேங்கடத்தைப் பற்றிய வருணனை முற்றிலும் இடைச்செருகலே என்று பின்னும் வற்புறுத்திச் செல்வர். பின்பழகிய பெருமாள் சீயர் அருளிய ஆருயிரப்படிக் குரு பரம்பரையிலும், இராமாநுசரின் திவ்விய சரிதையிலும் காணப்பெறும் உடையவர் காலத்தில் திருமலையில் நிகழ்ந்த சைவசமய வாதத்தைப்பற்றிய குறிப்புகளை எடுத்துக் காட்டி, இந்தச் சூழ்நிலையில் திருமலையை வைணவ தலம் என்பதை நிலைநாட்டவே இத்தகைய இடைச்செருகல் யாரோ ஒருவரால் நிகழ்ந்திருக்க வேண்டும் என்றும் கூறி, தன் முடிவுக்கு அரண் அமைத்துக் கொள்வர். இந்தச் சைவ வைணவ வாதத்தைப்பற்றி அடுத்த பொழிவில் விளக்குவேன்.