பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44


44 புடைய, பகடு-எருது; உயிர்ப்ப-இளைப்பாற; நீந்தி கடந்து; முரம்பு-வன்னிலம்; குழித்த தோண்டின; கூவல்-கிணறு; வம்பலர்-புதியர்; அசைவிட தளர்ச்சி நீங்க, புடையல்-கலிக்கின்ற; நடை அரு.செல்வதற்கு அரியi என்ற பாடலில் நாட்டின் இயற்கையமைப்பு கூறப் பெறுகின்றது. எங்கும் நிலம் நீரின்றிக் கிடக்கின்றது. மலைச் சுனைகள் யாவற்றிலும் நீர் வற்றி விட்டது. காய் கதிர்ச் செல்வனிடமிருந்து கனன்றுவரும் கதிர்கள் குன்று களின் உச்சியில் நெருப்பைக் கக்குகின்றன. அகன்ற பக்க மலைகளில் மூங்கில்கள் காய்ந்து கரிகின்றன. வேங்கைப் புலிகளையும் கொல்லும் திறம் வாய்ந்த மாபெரும் களிறுகள் தம்முடைய பெரிய துதிக்கைகளை நிலவு நிற மருப்புகளில் சுற்றிக்கொண்டு ஆற்றலிழந்து தளர்ந்த நிலையில் தம் பிடிகளுடன் அங்கு மிங்கும் இலைகளினிடைக் காணப்பெறும் மரங்களின் நிழலில் தங்கிக் கிடக் கின்றன. உப்பு மூட்டைகளை ஏற்றியுள்ள வண்டி களுடன் செல்லும் உமணர்கள் எருதுகளை வண்டிகளி னின்றும் அவிழ்த்து இளைப்பாற விடுகின்றனர். வன் னிலத்தை இடித்து அகன்ற இடத்தில் தோண்டப் பெற்ற கிணறுகளில் வழிப்போக்கர்களின் நீர்விடாயைத் தீர்க்கும் அளவுக்குக் கூட நீர் ஊறுவதில்லை. குன்றுகளே யுடைய இத்தகைய புல்லி நாட்டில் மக்கள் செல்லுவ தற்கே அஞ்சுகின்றனர். இன்றும் அந்நிலப் பகுதி மேற்கூறியவாறே காணப் பெறுகின்றது. ஆயின், யானைகளும் வேங்கைப் புலிகளும் காணப்பெறுவதில்லை. அவற்றிற்குப் பதிலாக காட்டுப் பன்றிகளும் நரிகளும் அப்பகுதியில்அலைந்து திரிகின்றன. இன்று உப்பு வாணிகர் அப்பகுதிகளில் தென்படுவதிவ்லே. ஆல்ை, நொடியுள்ள அக்காட்டு நெறிகளில் மாட்டு