பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 121

பொன்: உத்தரவு.

போகிறான். தாயும் மகனும் விக்கிமன் விலங்கிட்டு அழைத்துச் செல்லப்படும்போது பொன்னன், போலிக் கபாலிகர்கள் வேடத்தில் பலரைக் கொன்று ராஜ சேவகர்களைத் தாக்கி, விக்கிரமனை விடுதலை செய்து கொண்டு மகேந்திர மண்டபத்துக்கு ஓடுகிறான். அங்கே அருள்மொழியும் கபால பைரவனின் சிஷ்யன் குள்ளனும் தங்கியிருப்பதை அறிகிறான். உள்ளே ஓடுகிறான்.

விக்: அம்மா... அம்மா... அம்மா...!

பொன். மகாராணி! அரு: விக்கிரமா... விக்கிரமா...!

பாய்ந்து வந்து விக்கிரமன் அவள் கரங்களைப் பற்றிக் கொள்ளுகிறான்.

விக் அம்மா... உங்களை இந்தக் கோலத்தில் பார்க்கத்தானா உங்களுக்கு நான் பிள்ளையாய்ப் பிறந்தேன்? உங்களை இந்த நிலையில் விட்டுவிட்டுச் செல்லத்தானா என் தந்தை உங்களிடம் என்னை வீரமகனாக வளர்க்கச் சொன்னார்?

அரு: விக்கிரமா...!

விக்: ஐயோ, வீரத்தால் வீழ்ந்து விட்ட மன்னரின் மக்கள் கோழைத்தனத்தால் வீழ்ந்து விட்டார்களே... அம்மா... சிம்மக்கொடி பறந்த சிராப்பள்ளிக் கோட்டையிலே புலிக்கொடி