பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 மு. பரமசிவம் :

பாகவதர் அவர்கள் எங்கெங்கு தவை ஆட்டினார்களோ, ரசித்தார்களோ அங்கங்கே மக்களும் தவையாட்டினார்கள்; ரசித்தார்கள், சொல்லப் போனால் பாகவதர் அவர்களே தலையாட்டுகிறார்; ரசிக்கிறார்; ஆமோதிக்கிறார்; நாமும் ரசிக்கத் தான் வேண்டும் என்பதுபோல இருந்தது அது.

இரண்டொரு பாடல்களைக் கேட்டு ரசித்தபிறகு மக்களின் நெருக்கடியிலிருந்து தப்பிச் செல்வதற்காகப் பாகவதர் அவர்கள் எழுந்து போனார்கள். அப்பொழுது நான் என்ன நினைத்தேனோ, அதை இப்போது அப்படியே எழுதுகிறேன்.

அங்கே எத்தனையோ விளக்குகள் போடப்பட்டி ருந்தாலும், பாகவதர் அந்த இடத்தை விட்டு அகன்றதும், ஏதோ ஒரு இருள் கப்பிக் கொண்டது போல இருந்தது. எனக்கு மட்டுமல்ல, அங்கிருந்த அத்தனை பேருக்கும் அப்படித்தான் தோன்றியது.

பொன்நிறமான மேனி, பொன் நிறமான சட்டை. கழுத்தைச் சுற்றிச் சரிகை மட்டும் தெரியும் மேல் வேட்டி, காதுகளிலும் கைகளிலும் மின்னும் வைரங்கள்: நெற்றியில் ஜவ்வாதுப் பொட்டு தலையில் சுருட்டை முடி. இவை அத்தனையும் தங்கத்தால் வார்த்தெடுக்கப்பட்ட ஒர் உருவத்தில் வைரங்கள் பதித்து வைத்தது போன்று காட்சிய எளித்தன .சுருங்கச் சொல்லப் போனால் தங்கத்தாலான ஒர் உருவம் உயிர் பெற்று வருவது போலவே இருந்தது அது.