பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 மு. பரமசிவம் :

பொத்திவிட்டுக் கத்துவது சரியா? தப்பா?

சரியா? தப்பா? சரியா? தப்பா? காதல் செய்த குற்றம் எனது கண்கள் செய்த குற்றமானால் கண்ணைப் படைத்த கடவுள் செய்கை சரியா? தப்பா?

சரியா? தப்பா? சரியா? தப்பா? கல்யாணம் செய்த குற்றம் - எனது நண்பன் செய்த குற்றமானால் கற்பைப் படைத்த மனிதன் செய்கை சரியா? தப்பா?

சரியா? தப்பா? சரியா? தப்பா? காதல் பிச்சை வேண்டிக் கையை ஏந்தி வாசல் காத்து நின்றால் சாத்திரங்கள் பேசுவது சரியா? தப்பா? அன்பு கொண்ட உள்ளத்தோடு கள்ளமில்லாக் காதல் கொண்டால் ஆத்திரம் கொண் டேகவது சரியா? தப்பா?

சரியா? தப்பா? சரியா? தப்பா? மண்ணும் பொண்ணும் மாயை யென்று மக்களுக்குச் சொல்லிவிட்டு பெண்ணைப் பார்த்துக் கண்ணடித்தால் சரியா? தப்பா?