பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

©

188 மு. பரமசிவம் :

நாற்பது ஆண்டுகள் இலக்கியத்துறையில் எழுதி புகழ்பெற்ற ஓர் இலக்கியவாதியை ஒரு தமிழனை ஒரு சுயமரியாதையுள்ள எழுத்தாளனைச் சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்வது தமிழ்முற்போக்கு இலக்கியத்தையே இழிவுபடுத்துவதாகும்.

அரசாங்க உதவியுடன் வெளிவந்திருக்கும் ஒரு நூலில் தகவல் களஞ்சியத்தில் இப்படி ஒரு எழுத்தாளனை இழிப்படுத்தும் தகவல் வரலாமா? மற்ற மாநில இலக்கியவாதிகள் என்ன கருதுவார்கள்.

ஒரு தமிழன் பார்வையில் இத்தகைய மோசமான தகவல்கள் வெளிவருவதால் நியாயமாக நமக்கு வரவேண்டிய பரிசுகளும் பாராட்டுகளும் தடைப்படுகின்றன.

தமிழனே! தமிழ் இலக்கியத்துக்குத் தமிழ் எழுத்தாளர்களுக்குப் பரிசும் பாராட்டும் கிடைக்கும் வண்ணம் பாடுபடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

大 大 ★

அருள் பதிப்பகம் Yk சென்னை - 78