பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 39

பெரியார், ஈ.வெ.ரா.வின் ஆதரவாளரான முருகு.சுப்பிரமணியம் வெளியிட்ட பொன்னி' இதழில் நக்கீரன் என்ற பெயரில் விந்தன் கண் திறக்குமா? என்ற தொடர் கதையை எழுதினார். 'பொன்னி'யில் அந்தத் தொடர் முடியும் முன்னே 'கல்கி'யில் 'பாலும் பாவையும் என்ற தொடரை எழுத ஆரம்பித்தார். அந்தத் தொடர் விஷயமாக விந்தனுக்கும் கல்கிக்கும் நடந்த உரையாடல் கீழே தரப்பட்டுள்ளது.

“ஒரு நாள் அமரர் கல்கி அவர்கள், என்னைத் தம் வீட்டுக்கு வருமாறு பணித்தார்கள். சென்றேன். கையில் திறந்த பத்திரிகை ஒன்றை வைத்துக் கொண்டு ஏதோ யோசித்த வண்ணம் அப்படியும் இப்படியுமாகத் தம் அறையில் அவர்கள் நடை போட்டுக் கொண்டிருந்தார்கள்.”

“அழைத்தீர்களாமே என்றேன்."

"கல்கி காரியாலயத்தில் வேலை பார்க்கும் நீங்கள் வேறெந்தப் பத்திரிகையிலும் கதையோ, கட்டுரையோ எழுதக் கூடாது என்ற விஷயம் உங்களுக்குத் தெரியாதா?" என்று தமக்கே உரித்தான கம்பீரத்துடன் கேட்டார்கள்.

“தெரியும்!" என்றேன்.

"சரி. இந்தப் பத்திரிகையில் வெளியாகியிருக்கும தொடர்கதை யாருடையது?”