பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

©

  • திரையுலகில் விந்தன் 57

பின்னர் நடேசன் பழையபடி சினிமா முதலாளி ஆகி விட்டார்.

'அன்பு படத்துக்கு நட்பு முறையில் கதைவசனம், பாடல்களை விந்தன் எழுதியது போலவே நடிக நடிகைகளும் தொழில் நுட்பக் கலைஞர்களும் பணத்தை எதிர்பார்க்காமல் உழைத்து உதவினார்கள். நடேசன் வளரவேண்டிய கலைஞர்!- என்று மனதாரப் பாராட்டினார்கள்.

அன்பு படத்தின் வெற்றிக்கு எது காரணம்? கதையா, வசனமா, நடிப்பா என்று பிரித்துப் பார்க்க முடியாமல் அனைத்தும் ஒன்றாக இணைந்து வெற்றிக்கொடி நாட்டின.

'அன்பு' படத்தின் கதை

கணவனிடம் மனைவி அன்பு செலுத்தலாம். அண்ணனிடம் தங்கை அன்பு செலுத்தலாம். அப்பாவிடம் பிள்ளை அன்பு செலுத்தலாம். ஆனால் மூத்தாள் குழந்தைகளிடம் அன்பு செலுத்தும் சித்தியை நீங்கள் எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா?

இல்லையென்றால் இதோ இருக்கிறாள் தங்கம். அவளைப் பாருங்கள். அவள் சொல்லுவதைக் கேளுங்கள். அவளுடைய வாழ்க்கையைப் பின்பற்றுங்கள்.

உங்களுக்குத் துன்பம் இருக்காது, துயரம் இருக்காது, கஷ்டமும் இருக்காது, நஷ்டமும் இருக்காது.

ஏன்?