4).
- ్మ* திரையுலகில் விந்தன் 95
அதற்காகத்தான் உன்னை இருக்கச் சொல்கிறேன். என்னுடன் யுத்தத்துக்கு வருவதைக் காட்டிலும் இளவரசருக்கு துணையாயிருந்தால் அதுவே எனக்குத் திருப்தியளிக்கும். இருக்கிறாயல்லவா?
பொன் : இருக்கிறேன் மகாராஜா.
பார்
பார்
பார்
(கண்ணிர் சிந்துகிறான்.) ஆ. தாங்களா? பார்த்திப சோழ மகாராஜா வெண்ணாற்றங்கரைப் போர்க்களத்திலே அடி பட்டு விழுந்து கிடக்கிறார். அவரது ஆவி பிரியுமுன் தன் உயிரை விட்ட தன் ராஜ பக்தியை நிரூபிக்கிறது பட்டத்துயானை. உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் பார்த்திப மகாராஜா முன் ஒரு சிவனடியார் நிற்கிறார்.
- ஸ்வாமி...தாங்கள் யார்?
அம்பலத்தாடும் பெருமானின் அடியார்க்கு அடியவன் நான்... இன்று நடந்த யுத்தத்தில் ஆச்சரியமான உன் வீரச்செயல்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அப்பேர்பட்ட மகாவீரனை தரிசிக்க வேண்டுமென்று வந்தேன்.
- அதிருக்கட்டும். யுத்தம் எப்படி முடிந்தது
ஸ்வாமி?
- அதைப் பற்றிச் சந்தேகம் வேறு இருக்கிறதா...
உனக்கு? வெற்றி பெற்றது பல்லவ சைனியந்தான்.
- நான் அதைக் கேட்கவில்லை ஸ்வாமி. சோழ
சைனியத்திலே யாராவது?