பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேறு ஒரு பெயர் தேவைப்பட்டது; பாண்டுவின் புதல்வர் பாண்டவர் எனப்பட்டனர் சந்தனு அரசன் கங்கைக் கரையில் அத்தினாபுரி என்ற நகருக்கு அரசன் சந்தனு மகாராசன், இன்று காதலைப்பற்றிப் பிரச்சனைகள் வினாக்கள் எழுகின்றன; அன்று காதலுக்கு மதிப்புத்தரப்பட்டது. வீரத்துக்கும் காதலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு; கோழைக்குக் காதலிக்கத் தெரியாது. அதற்குத் துணிவு தேவைப்படுகிறது. வாழ்க்கை சாதனைகள் மிக்கது. சரித்திரம் படைப்பது: காதல் அதற்குத் தூண்டு கோலாக அமைவது. சந்தனு வனவேட்டைக்குச் சென்றான்; கன்னி வேட்டையில் அது முடிந்தது.