பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 நீங்கள் எல்லாம் பதவிகளுக்காகத் தலைமை செய்யும் உதவிகளுக்காக அடிமைப்பட்டு அடங்கி விட்டீர்கள்! இதுதான் இந்த நாட்டின் சீர்கேடு. நான் பாண்டவரின் மனைவி; அது அல்ல இங்குக் கேள்வி: பெண்; அவளை அவையில் நிறுத்தி ஆபாசப் படுத்த நிற்கிறார்கள். அழகுப் போட்டிக்கா என்னை அழைத்து வந்திருக்கிறார்கள்? அதுவே கூடாது என்று கொடி பிடிக்கும் நாடு இது: மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தாமல் மவுனம் சாதிப்பது