பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 ஏன்? உங்கள் குருதி குளிர்ந்து உறைபனி ஆகிவிட்டது ஏன்? வீரமற்ற பேடிகளாக நெட்டை மரங்களாக நிற்கின்ற நீங்கள் எல்லாம் ஆண்கள் என்று சொல்லிக் கொள்ள அருகதை இல்லை வெட்கம்; வேதனை. எங்களுக்கும் காலம் வரும்; இந்தச் சபையில் ஒரு பெண் இருந்திருந்தால் அவள் கண் கலங்கி இருப்பாள் கொதித்து எழுந்து கொக்கரித்து இருப்பாள் நீதி கிடைத்திருக்கும். இந்தச் சமுதாயம் ஆண் ஆதிக்கம் கொண்டது: உங்களுக்கு நன்மைகளைத் தேடிக் கொள்ளவே சட்டங்கள் ஆசாரங்கள் விதிமுறைகள்: காலம் வரும்; எல்லாம் மாறும்.