பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 இன்று ஒரு பெண் அவளுக்கு நேர்ந்த கதி இது நெருப்புப் பொறி, இனிப் பெண்கள் விழித்துக் கொள்வார்கள். சமஉரிமை அதைச் சாதித்தால்தான் பெண்ணுக்கு விடுதலை; இனி நாங்கள் அடுப்பு ஊதும் அடிமைகள் அல்ல. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் நடத்துவோம். இது எங்கள் முழக்கம்" என்று அதிரப் பேசினாள். 'எட்டும் அறிவினில் இங்கு ஆணுக்குப் பெண் இளைப்பில்லை' என்று முரசதிர அவள் ஆவேசமாகப் பேசினாள். எதிர்த்துப் பேச அறியாத முரடன், மூர்க்கன் துரியன் ஆணவம் தூண்டப்பட்டது.