பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 பம்பரம் தன்னிச்சையில் சுழல்கிறது; பின் விசை அடங்கியதும் அடங்கி நிற்கிறது துணைச் சுற்றும் குழந்தை கீழே விழுவது இல்லை; தூண் அதற்குப் பற்றுக்கோடு. அவள் பல கதைகளைக் கேட்டு இருக்கிறாள்; பாகவதக் கதைகள். 'ஆதிமூலமே என்று கதறிய யானையின் இடரை நாரணன் களைந்து இருக்கிறான். துணை உதைத்தான் இரணியன், அதில் வெளிப்பட்டு இறைவன் அவன் ஆணவத்தை அழித்து ஒழித்தான். நாரணன் விளையாட்டுகள் எல்லாம் அவள் கண்முன் வந்து நின்றன.