பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 நல்லது கூறி நாடு கடத்தி வைத்தனர். விக்கிரமாதித்தன் நாடு ஆறுமாதம்; காடு ஆறுமாதம். அதனால் அவன் பெற்ற அனுபவங்கள் மிகுதி: ஆட்சி சிறப்புறச் செய்தான் உல்லாச வாழ்க்கையில் உலகம் அறிய முடியாது. அதனால் இந்தக் கரடு முரடான வாழ்க்கை அவர்களுக்கு நன்மை தந்தது இந்திய தேசத் தலைவர்கள் சிறை சென்றவர்கள் பலர்; தியாகச் செம்மல்கள். அவர்கள் மதிக்கப் பெற்றார்கள்: இந்த நாட்டை உருவாக்கித் தந்தார்கள்; அவர்கள் புகழ் அழியாததாக விளங்குகிறது. இவர்கள் சிறைக்கு அனுப்பப் படவில்லை; காட்டுக்கு அனுப்பப்பட்டனர்; அவர்கள் அனுபவங்கள் பலப்பல.