பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 மன அடக்கம் உகந்தது அன்று: அதனைப் புலன்கள் வழி வெளியே உலவ விடுவது தான் ஆரோக்கிய வழி. கல்வி கேள்விகளில் ஆய்வுகளில், உலக நன்மைகளில் நற்பணிகளில் மனம் செலுத்தினால் இந்த விபத்துக்களைத் தவிர்க்க முடியும். காலம் மாறிவிட்டது இந்தப் பழைய சித்தாந்தங்கள் இன்று ஏற்றுக் கொள்ளப் படுவது இல்லை. அதன் தீமைக்கு எடுத்துக் காட்டு துருவாச முனிவரின் வாழ்வு நிகழ்ச்சிகள். நாழிகை கழிந்து அந்தத் தவசி அங்கு வந்து சேர்ந்தார். சட்டி பானை கழுவித் துருபதி அவற்றைக் கவிழ்த்து விட்டாள்; கொஞ்சம் கண்மூட நினைத்தாள்.