பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 மற்றும் ஒரு பதின்மூன்று ஆண்டுகள் கடத்துவது என்று முடிவு செய்தனர். 'விராட நகரில் தான் அவர்கள் இருக்கிறார்கள்' என்பதை ஒற்றரைக் கொண்டும் அறிந்து கொண்டனர். எப்படி அவர்களை வெளிப்படுத்துவது? அந்த ஊருக்குச் சென்று மாடுகளைப் பிடித்து மடக்கிப் போட்டால் விராடன் படை எடுத்து வருவான்; அவர்களுக்கு உதவியாகப் பாண்டவர்கள் நிச்சயம் வெளிப்படுவார்கள். மாடுகளை மடக்கிப் பிடித்தனர்; மேயச் சென்ற பசுக்கள் வீடு திரும்பவில்லை; இடையர்கள் சென்று அரசனிடம் முறையிட்டனர். அரச மகன் உத்தரன் இளையன்;