பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 ஆகப் போகிறாய்; முடிவு செய்து விட்டாய்" என்று தன் கருத்தை வெளியிட்டு விளக்கினான். கண்ணன் அதிர்ந்து போனான். 'போர்தான் முடிவு' என்பது தான் கருதியது தவறோ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். 'தவிர்க்க வழி உளதோ' என்று கேட்டு அறிய அவனிடம் விரும்பினான்; "போர் தவிர்க்க முடியும்; தலைமை அதனை மாற்ற வேண்டும்; இது உலகப் பொதுநியதி. இங்கே தக்க தீர்ப்பு ஒன்று உள்ளது கன்னன் யார்? அது உனக்குத் தெரியும். அவனை மன்னன் ஆக்குவது முதற்செய்கை: அவனைக் கொல்வது என்று வீர வசனம் பேசி வரும் விசயன்