பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 குடிக்குத் தலைவன் வீடுமன்; கல்வி கற்றுத் தந்த ஆசான்கள் கிருபன் துரோணன், அவர்கள் மகன் அசுவத்தாமன்; எங்குப் பார்த்தாலும் உறவு: பொங்கும் உயர் அன்பின் சுற்றத்தினர்; பழகியவர்கள். இவர்களா பகைவர்கள்? பொருகளம் என்று கூறுகின்றனர்; இது பலிகளமாக மாறுவது உறுதி; குருதி ஆறு பெருக்கெடுக்க, அவர்கள் கைகால்கள் துடிதுடிக்கச் சாவை நோக்கிப் பயணம்; இதுவா வெற்றி, இவர்களைக் கொன்றுதான் ஆக வேண்டுமா? கட்டிடங்கள் இடித்துத் தள்ளலாம்; புதிதாக அடுக்கிக் கட்டலாம்; இறந்தவர்கள் அவர்கள் உயிர் பெற்று எழமுடியுமா? இந்த ஆண்கள் படுகளத்தில் பட்டால் குங்குமம் இட்டுக் கோயில்கள் செல்ல எந்த மங்கையர் உயிர் வாழ்வர்?