பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 அம்பிகைக்கு மகன் பிறந்தான்; அவன் குருடன் ஆகப் பிறந்துவிட்டான். அம்பாலிகைக்கு ஒரு மகன்; அவன் சோகையனாகிவிட்டான். மற்றொரு மகன் பெற வியாசன் அழைக்கப்பட்டான். தாதி ஒருத்தி கடைசி நேரத்தில் ஆள்மாறாட்டம் செய்து உதவினாள்; அம்பிகை விலகிவிட்டாள். அந்தத் தாதிக்கு விதுரன் பிறந்தான்; அவன் கல்வி கேள்விகளில் உயர்ந்து விளங்கினான். என்றாலும் விதுரன் தாதி மகன்; அவனுக்கு உயர்வாழ்வு அளிக்கப்படவில்லை. திருதராட்டிரன் காந்தார நாட்டு அரசமகள் காந்தாரியை மணந்தான்; நூறுமக்களைப் பெற்றாள்.