பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 துரியன் மூத்தவன்; அடுத்தவன் துச்சாதனன்; மற்றொரு மகளும் வாய்த்தாள், துச்சளை என்பது அவள் பெயர். பாண்டுவுக்கு மக்கள் ஐவர் பிறந்தனர்; குந்திக்கு மூவர்; பாண்டுவின் மனைவி மற்றொருத்தி மாத்திரி அவளுக்கு இருவர். பாண்டவரும் கவுரவரும் பாண்டு அகாலமரணம் அடைந்தான்; அதனால் அவர்கள் அத்தினாபுரிக்கு அழைத்து வரப்பட்டனர் திருதராட்டிரன் பார்வை இழந்தவன்; எனினும் அவனே மூத்தவன்; ஆட்சித் தலைவனாயினான். அங்கே திருதராட்டிரன் அவர்களுக்கு ஆதரவு தந்து சகல நன்மைகளும் செய்து கல்வி கேள்விகள் கற்க வழி செய்தான்.