பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 துரியனின் பொறாமை கிருபனும் துரோணனும் முறையே அவர்களுக்கு விற்பயிற்சி கற்பித்தனர். தொடக்கத்தில் உறவு நல்ல நிலையில் இருந்தது: மெல்ல மெல்லப் பொறாமை; அதற்குக் காரணம் பாண்டவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினர். கன்னன் தேரோட்டியின் வளர்ப்பு மகன். அவன் சகவாசம் துரியனுக்குக் கிடைத்தது. கன்னன் பரசுராமரிடம் விற்பயிற்சி பெற்றவன்; விற்பயிற்சியில் சிறந்து விளங்கினான்; அவன் துரியனுக்குத் தோழன் என்பதால் துரியன் திமிர் படைத்தான். வீமனும் துரியனும் சம வயதினர்; சம வலியினர்.