பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 இருந்தாலும் அவன் அதை வெளிக் காட்ட வில்லை; அவள் தன் ஆற்றலை விளம்பினாள் தமையன் வந்தால் உயிருக்கு ஆபத்து அதற்காகத் தன்னை ஏற்றுக் கொள்ள அவனை வற்புறுத்தினாள். மானம் இடையிட்டது: அவன் மறுத்துவிட்டான், இவர்கள் தருக்க வாதம் கண்டு குறுக்கே வந்தான் இடும்பன்; அவள் தமையன். தங்கையின் கற்புக்கு அவன் காவல் பேசினான்; இருவரும் மற்போர் கண்டனர்; அவன் மல்லாந்து விழுந்து மரித்தான். இவள் ஓலமிட்டாள்; அதைக் கேட்டுக் குந்தி அங்கு வந்து சேர்ந்தாள். விசாரணை வைத்தாள், அவளுக்கு இனி யாரும் துணைஇல்லை; அவளுக்கு அடைக்கலம் தர விரும்பினாள்.