பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 சுவைபார்ப்பதற்கு முன் அவன் இவனை ஒரு கை பார்த்தான். அலறி விழுந்தான். இடும்பனின் முடிவை அடைந்தான் பகன். வீமன் பகனாக மாறினான்; வேண்டிய அளவு அந்த உணவைத் தான் உண்டு வீடு திரும்பினான். வீமனுக்குக் கருமம் செய்யத் தருமநூல் கற்ற புரோகிதர் காத்திருந்தனர். அவன் வருவதை அவர்கள் நம்பவில்லை; பேய் எனப் பிறழ்ந்து உணர்ந்து பின் அவர்கள் தெளிவு பெற்றனர். பகன் இறந்த செய்தி இடும்பன் மாண்ட கதை அத்தினாபுரிக்கு எட்டின.