பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 எதையும் மிகுதிப் படுத்தி எரிச்சல்கள் எழுப்பிக் கொண்டு விளைச்சல்களை அவர்கள் உற்பத்தி செய்து கொள்ளவில்லை; மெல்ல மெல்ல மாறி அவர்கள் கண்ணியமான வாழ்க்கையை அடைந்தனர். ஐவர் அவளுக்குக் கணவரா? தருமன் மட்டும் அவள் கணவனா? இது அறுதி செய்ய இயலாது. சடங்கின்படி ஐவர் கணவர்; அதற்குப் பிறகு அவர்கள் உறவுமுறைகள்: அவர்கள் தனிவாழ்க்கை. ஐவரும் கணவர் என்றால் இது ஒரு விதிவிலக்கு என்று கொள்வது தக்கது. இல்லை தருமன்தான் கணவன்; மற்றவர்கள் பொட்டு கட்டியதோடு நின்றுவிட்டார்கள் என்பது நியமம்; அதுதான் அவர்கள் நடைமுறை வாழ்க்கை.