பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 அருச்சுனன் யாரையும் காதலிக்காமல் மணந்தது இல்லை; அடுத்து அவன் மூவரைக் காதலித்து மணந்து கொண்டான்; வீமன் இடும்பியை மணந்து கொண்டான்; நகுலன் சகாதேவன் அவர்களைப் பற்றிய கதைகள் தெரியவில்லை. திரெளபதி தருமனின் தரும பத்தினி, தருமப்படி பத்தினி, தருமனின் பத்தினி. வாழ்க்கையைப் பங்கிட்டுக் கொண்டவள்; அதனால் அவள் தருமனின் வாழ்க்கைத் துணைவியும் ஆவாள். இந்திரப்பிரத்த ஆட்சி பாண்டவர்கள் துருபதனின மருமகன்கள்; அதனால் அவர்களுக்குத் தேர் ஏறிச் செல்லும் ஏர் மிகு வாழ்க்கை அமைந்தது. அவன் கொடுத்த சீர்கள் தேர்கள், யானைகள், காலாட்படைகள். அவர்களை மன்னர் நிலைக்கு உயர்த்திக் காட்டின.