பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 பெற்றதாய் அவளுக்குக் கண்ணன் தந்த வாக்கு அது அவன் போக்கை அனுமதித்தது; அவனுக்கு அதற்குமேல் வாழ அவன் கொடுத்து வைக்கவில்லை. "நா காக்க காவாக்கால் சோ காப்பர் சொல்லிழுக்குப்பட்டு' என்பதற்கு அவன் வாழ்க்கை எடுத்துக்காட்டு ஆகியது. வேள்வி விழா விமரிசையுடன் நடந்து முடிந்தது; துரியன் அவன் கூட்டத்தினர் மகிழ்வுடன் கலந்து கொண்டனர். பாண்டவர்களின் ஆடம்பரம்; புகழ் வேட்கை அதற்காக அவர்கள் வாரி இறுத்த செல்வம் துரியனின் அகந்தையைக் கிளறியது. ஆடம்பர வாழ்க்கை அது அவர்களுக்குப் பெருமை: அதே சமயம் அது கிளறிவிடும் பல சிறுமைகள். துரியன் அவன் பண்டார நாயகன்;