பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தட்டிப் பேசுவதைத் துரியனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. "வேட்டி சட்டை இலவசம், சத்துணவுச் சாப்பாடு; எங்கள் மிச்சிலை உண்ணும் நீ நச்சி அவர்கள்பால் பேசுகிறாய்; அடங்குக' என்று ஆரவாரித்தான். விதுரனையே செய்தி கூற அனுப்புவது என்று முடிவு செய்தனர்; அவன் சொல்லை அவர்கள் தட்ட மாட்டார்கள் அவனிடம் பொறுப்பை ஒப்படைத்தனர். விதுரன் பயணம் 'மண்டபம் காண வருக' என்று அழைப்பு விதுரன்பால் அனுப்பி வைத்தனர்; அதற்குமேல் அவர்களிடம் எதுவும் கூற அவனுக்கு அனுமதி இல்லை; அதை விதுரன் பொருட்படுத்தவில்லை.