பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவர்னருக்கு இதைவிடச் சிறந்த அன்பளிப்பை வேறு யாரும் வழங்க முடியாது. கவர்னரது பாராட்டையும், புகழ்ச்சியையும் பெற்ற தமது சிறிய தந்தையாருக்கு, இராமநாதபுரம் சேதுபதி மன்னரும் தமது மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார். மிகுந்த மனநிறைவுடன் கவர்னர் சேதுபதி மன்னரது வரவேற்பை பெற்றுக் கொண்ட கவர்னர், அடுத்து லேத்தம்ஸ் பங்களாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய விருந்தில் கலந்து கொள்ள புறப்பட்டார்.

இராமநாதபுரம் நகர் மக்கள், கவர்னருக்கு தினகர் வழங்கிய அன்பளிப்பு நூல் பற்றியும், கவர்னர் தினகரைப் பாராட்டியது பற்றியும் அன்று முழுவதும் வெகுவாகப் பேசிக்கொண்டே இருந்தனர். பொதுவாக, நம்மில் ஒருவரை நாம் புகழ்வது என்பது அரிய செயல் அதிலும் வேற்றுநாட்டவரும், மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் நம்மவர் ஒருவரைப் புகழ்ந்தால் அது மக்கள் பெருமையுடன் பேசி மகிழும் பேச்சாக அமைவது இயல்புதான்.

<જલ્લા চক—

50