பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகம்பேறு தந்த மகிழ்ச்சி

தினகரரது இல்லறம் தொடர்ந்தது. அவரது இல்லத்தரசி சேதுமுத்து நாச்சியாரும் குறைகள் எதுவும் இன்றி தினகருடன் இணைந்து வாழ்ந்து வந்தார். இருவரும் வாழ்க்கையின் இடைப்பகுதியை அடைந்து விட்டனர். ஆனால் . . . இருவருக்கும் குழந்தைப் பேறு கிட்டவில்லை. இறைவனது நியதி அவ்வளவுதான் என்ற எண்ணம் இருவருக்கும் வலுத்து வந்தது. நாச்சியார் ஒரளவு தேறுதல் பெற்றுவிட்டார். ஆனால் தினகரது உள்ளத்தில் ஒரு தவிப்பு .

அமைதியும் அழகும் நிறைந்த இராமமந்திரம் மாளிகையில் குழலும் யாழும் கூட்டாத இனிய மழலை ஒலி மட்டும் கேட்கவில்லையே என்ன செய்யலாம். மாமரத்துக் கிளைகளில் அமர்ந்து கூவும் குயிலின் குரலும், மாளிகையின் முற்றத்தில் கார்கால வரவைக் கண்டு மகிழ்ச்சியுற்று அந்த வண்ணத் தோகை விரித்தாடும்

63