பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.

வாழ்வில் காரிருள்

1ொழ்க்கைச் சக்கரங்களின் வேகம் குறைந்தது. சிலந்திப் பின்னல் போல சிந்தனைகள் கவலைகளின் இறுக்கம். இடையிடையே பொதுப் பணியில் ஈடுபடும் பொழுது ஒரு சிலிர்ப்பு : ஒரு புதிய உத்வேகம். இராமநாதபுரம் அ ர ண் ம ைன யி லி ரு ந் து இரட்டைக்குதிரைகள் பூட்டிய நான்கு சக்கர பீட்டன் வண்டி அல்லது கார் இராமமந்திரத்திற்கு வரும். அதில் அமர்ந்து சென்று திவான் பணிகளைப் முடித்து விட்டு தினகர் திரும்புவார்.

வேறு சில சமயங்களில் யூனியன் போர்டு அலுவலகத்திற்கு சென்று வருவார். அன்றைய நிலையில், கிராமங்களுக்கு ஊராட்சியும் நகரங்களுக்கு பேரூராட்சி அல்லது நகராட்சி அமைப்புக்களும் ஏற்படாத காலகட்டம், இராமநாதபுரம் நகர் சாலை வசதி, ககாதாரம், கல்வி வசதி இரவு . விளக்கு வசதி போன்றவைகளை அமைத்துப்

76