பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தையும் மகளும்

நாட்கள் நழுவி மறைந்தன. நேற்று நடந்து போல நிகழ்ந்த கண் வைத்தியமும் லண்டன் மருத்துவரது பாதிக்கப்பட்ட இடது கண்ணிற்குப் பதில் தவறாக வலது கண்ணில் மருந்தைப் புகுத்தி இருந்த கண் பார்வையையும் இழக்கச் செய்தது ஆகியன தினகரது சிந்தனையில் மேலும் விரக்தியை நிறைத்து ഷ് ഖാr ஒரு வேதாந்திபோல மாறச்செய்தது இதனால் எப்பொழுதும் அமைதி நிறைந்து விளங்கும் அவரது மாளிகையில், ஒரு செயற்கையான

சூழ்நிலை நிலவியது.

ஒவ்வொரு பகுதியும் எப்படி இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அமைத்த இராமமந்திரம் மாளிகையில் நடமாட்டமே இல்லாமல் முகப் பில் சோபாவில் தினகர் அமர்ந்து மென்மையாகத் தவழ்ந்து வரும் காற்றை அனுபவித்தவாறு முடங்கிப்போய் இருந்தார்.

84