உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

வேண்டிக்கொண்டான். அம்மன்னனு ம் பராக்கிரம பாண்டியன் வேண்டுகோட்கிணங்கி இலங்காபுரித் தண்ட நாயகன் தலைமையில் பெரும்படை யொன்றை அனுப்பினான். அச்சிங்களப்படை பாண்டி நாட்டிற்கு வருவதற்குள் மதுரையை முற்றுகையிட்டிருந்த குலசேகர பாண்டியன், பராக்கிரம பாண்டியனையும் அவன் மனைவி மக்களையும் கொன்று அத்தலைநகரைக் கைப்பற்றி அங்கிருந்து கொண்டு ஆட்சிபுரிவானாயினன். அந் நிகழ்ச்சியை அறிந்த இலங்காபுரித் தண்டநாயகன் பெருஞ் சினங்கொண்டு, பாண்டி நாட்டை வென்று கொலையுண்ட பராக்கிரம பாண்டியனைச் சேர்ந்தோர்க்கு அளிக்கக்கருதி, அந் நாட்டிலுள்ள இராமேச்சுரம் குந்துகாலம் என்ற ஊர்களைக் கைப்பற்றினான். அங்ஙனம் பாண்டி நாட்டைச் சிறிது சிறிதாகப் பிடித்துக் கொண்டுவந்த சிங்களப் படைக்கும் குலசேகர பாண்டியன் படைக்கும் பல ஊர்களில் கடும்போர்கள் நடைபெற்றன. அப் போர்களில் குலசேகரன் படைத் தலைவர்களாகிய சுந்தர பாண்டியன், பாண்டியராசன் என்போர் தோல்வியுற்றனர்; மற்றொரு படைத்தலைவன் ஆளவந்தான் என்போன் உயிர் துறந்தான். ஆகவே, இலாங்காபுரித் தண்ட நாயகன் பெருவெற்றி எய்தினான். அதனையறிந்த குலசேகர பாண்டியன், கொங்கு நாட்டிலிருந்த தன் மாமன் படைகளையும் சிதறிக்கிடந்த பராக்கிரம பாண்டியன் சேனைகளையும் தன் படைகளையும் ஒருங்கு சேர்த்துக்கொண்டு தானே இலாங்கா புரித் தண்ட நாயகனை எதிர்த்துப் போர் புரிவானாயினன். அப்போரிலும்

ப் பாண்டியவேந்தன் தோல்வி எய்தவே, இலாங்காபுரித் தண்டநாயகன் வெற்றி பெற்று, மதுரை மாநகரைக் கைப்பற்றி, கொலையுண்ட பராக்கிரம பாண்டியன் கடைசி மகனும் மலை நாட்டில் ஒளிந்து கொண்டிருந்தவனுமாகிய வீரபாண்டியனை அழைத்துப் பாண்டி நாட்டை ஆட்சிபுரிந்து வருமாறு செய்தான்.

அச்சிங்களப் படைத்தலைவன், கீழைமங்கலம், மேலை மங்கலம் முதலான ஊர்களைப் பிடித்து அவற்றைக் கண்ட தேவமழவராயன் என்பான் ஆண்டு வருமாறு அளித்தனன்;