உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

1

13

இவன் தான் இயற்றிய பரிபாடலில் ' சிலம்பாற்றால் அழகு பெற்றுள்ள திருமாலிருஞ் சோலை மலையின் சிறப்பையும் அங்கு எழுந்தருளியிருக்கும் கண்ணபிரான் பலதேவன் ஆகிய இருவரது பெருமையையும் நன்கு விளக்கியுள்ளான். இனி, அக்குன்றம் திருமாலையொக்கும் என்றும், தன்னைக் கண்டோருடைய மயக்கத்தைப் போக்கும் பெருமையுடைய தென்றும், ஆதலால் சென்றேனும் கண்டேனும் திசைநோக்கி யேனும் அதனைக் குடும்பத்துடன் வழிபடுமின் என்றும் உலகத்தாரை நோக்கி இவ்வேந்தன் அப்பாடலில் கூறியிருத் தலும், அக்குன்றத்தின் அடியின்கண் உறைதலே தான் எய்த விரும்புவது என்று முடித்திருத்தலும் இவன் திருமாலிடத்துக் கொண்டிருந்த பேரன்பினை இனிது புலப் படுத்தாநிற்கும். இவன் புறநானூற்றில் பாடியுள்ள பொருண் மொழிக்காஞ்சி’ வனுடைய பேரறிவினையும் உள்ளக் கிடக்கையினையும் தெள்ளிதினுணர்த்தும் இயல்புடையதா யிருத்தலின்

அப்பாடலை ஈண்டுத் தருகின்றோம்.

'உண்டா லம்மஇவ் வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்

தமிய ருண்டலும் இலரே முனிவிலர்

துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப்

புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்

உலகுடன் பெறினுங் கொள்ளல ரயர்விலர்

அன்ன மாட்சி யனைய ராகித்

தமக்கென முயலா நோன்றாட்

பிறர்க்கென முயலுந ருண்மை யானே’3

(புறம்-182)

1.

2.

இப்பாடற்கு இசை வகுத்தவர் மருத்துவன் நல்லச்சுதனார் என்பார். பொருண்மொழிக்காஞ்சி என்பது உயிருக்கு இம்மை மறுமைகளில் உறுதிதருகிற பொருளை ஒருவனுக்குக் கூறுதல்.

3.. இதன் பொருள்: உண்டேகாண், இவ்வுலகம்; இந்திரர்க் குரிய அமிழ்தம் தெய்வத்தானாதல் தமக்கு தவத்தானாதல் தமக்கு வந்து கூடுவதாயினும் அதனை இனிதென்று கொண்டு தனித்து உண்டலுமிலர்; யாரோடும் வெறுப்பிலர்; பிறர் அஞ்சத்தகும் துன்பத்திற்குத் தாமும் அஞ்சி அது தீர்த்தற் பொருட்டு மடிந்திருத்தலுமிலர்; புகழ் கிடைக்கின் தம்முடைய உயிரையுங் கொடுப்பர்; பழியெனின் அதனான் உலகமுழுதும் பெறினும் கொள்ளார்; மனக்கவர்ச்சி யில்லார்; அப்பெற்றித்தாகிய மாட்சிமைப் பட்ட அத்தன்மையராகித் தமக்கென்று முயலாத வலிய முயற்சியையுடைய பிறர்பொருட்டென முயல்வார் உண்டாதலான் - என்பது.