உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




114

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

யவனாய் அவற்றை அன்புடன் ஆதரித்து வந்தனன் என்பது இனிது பெறப்படுகின்றது. எனவே, பேரரசராயிருப்பார்க்கு இன்றியமையாத சிறந்த பண்புகளுள் ஒன்றாகிய சமயப் பொறை நம் இராசராச சோழன்பால் நன்கு நிலைபெற்றிருந்தது என்பது தெளிவாகப் புலப்படுதல் காண்க.

இவ்வேந்தன் ஆட்சியில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி களுள் சோழ இராச்சியம் முழுவதையும் அளந்தமை ஒன்றாகும். ஓர் அரசன் தன் ஆட்சிக்குட்பட்ட நாடுகள் எல்லா வற்றையும் அளந்து நிலங்களின் பரப்பை உள்ளவாறு உணர்ந்தாலன்றி நிலவரியை ஒழுங்குபடுத்திக் குடிகளிடமிருந்து வாங்குவது இயலாததாகும். ஆதலால் இவன் தன் ஆட்சியின் 16-ஆம் ஆண்டாகிய கி. பி. 1001-ல் சோழ இராச்சியம் முழுவதையும் அளக்குமாறு ஆணையிட்டனன்'. அவ்வேலையும், குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் தலைமையில் தொடங்கப் பெற்று இரண்டு ஆண்டுகளில் நிறைவேறியது. அவ்வதிகாரி இராச்சியம் முழுமையும் அளந்த காரணம் பற்றி 'உலகளந்தான்' என்னுஞ் சிறப்புப் பெயர் பெற்றனன். அன்றியும், ‘இராசராச மாராயன்' என்னும் பட்டமும் அவனுக்கு இராசராச சோழனால் வழங்கப்பெற்றிருப்பது அறியத்தக்கது. நிலம் அளந்த கோல் பதினாறு சாண் நீளமுடையது. அதனை உலகளந்த கோல் என்றும் அந்நாளில் வழங்கினர்.

இம்மன்னன் புரிந்த மற்றோர் அரிய செயல், சோழ இராச்சியத்திலுள்ள ஒவ்வொரு மண்டலத்தையும் பல வள நாடுகளாகப் பிரித்து யாண்டும் தன் ஆட்சி இனிது நடைபெறுமாறு செய்தமையேயாம். அஃது இராச்சியம் முழுமையும் அளந்த பின்னர், இவன் தன் ஆட்சியின் பதினேழாம் ஆண்டாகிய கி.பி. 1002-ல் புரிந்த சீர்திருத்தச் செயலாகும்'. அதற்குமுன் ஒவ்வொரு மண்டலமும் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்ருந்தது; சில நாடுகளைத் தன்னகத்துக் கொண்ட வளநாடு என்னும் உட்பிரிவு அக்காலத்தில் ல்லை. நாட்டை இக்காலத்துத் தாலூகாவிற்குச் சமமாகவும், வளநாட்டை ஜில்லாவிற்கு ஒப்பாகவும்

1. S. I. I., Vol., VIII, Nos. 222 and 223.

2. S. I. I., Vol. V, No. 1409.