உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

147

குடியேற்றினான் என்று சொல்லப்பட்டுள்ளது'. அவ்வுரையில் குறிப்பிடப்பெற்ற சைவர்கள் சைவாசாரியர்கள் போலும்.

இனி, இவனது ஆட்சியின் பதின்மூன்றாம் ஆண்டில் வரையப்பெற்ற கல்வெட்டுக்களில் காணப்படும் மெய்க்கீர்த்தி, இவன் கப்பற்படைகளைக் கடல் நடுவிற் செலுத்திக் கடாரங் கொண்ட செய்தியை விரிவாகக் கூறுகின்றது. திருவாலங் காட்டுச் செப்பேடுகளில் அச்செய்தி மிகச் சுருக்கமாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே, கடாரப் படையெடுப்பைப் பற்றிய செய்திகளை அறிந்து கொள்வதற்கு இவன் மெய்க்கீர்த்தியே சிறந்த கருவியாகும். அப்படையெழுச்சி கி. பி. 1025-ஆம் ஆண்டிற்கு முன்னர் நிகழ்ந்ததாதல் வேண்டும். கடல் கடந்து சென்று பகைவர்களோடு போர்புரிவது அக்காலத்தில் எளிதன்று ஆதலால், இன்றியமையாமை பற்றியே இராசேந்திரன் அப்படை யெடுப்பில் ஈடுபட்டிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை.

.

இராசராச சோழன் ஆட்சியின் பிற்பகுதியிலும் இராசேந்திர சோழன் ஆட்சியின் முற்பகுதியிலும் சோழ இராச்சியமும் கடார இராச்சியமும் தம்முள் நட்புக் கொண்டிருந்தன என்பது ஆனை மங்கலச் செப்பேடுகளால் அறியக்கிடக்கின்றது.2 அத்தகைய நிலையிலிருந்த அவ்விரு இராச்சியங்களும் சில ஆண்டுகளில் பகைமைகொண்டு ஒன்றன்மேல் மற்றொன்று போர் தொடங்கும் நிலையை எய்தியமைக்குக் காரணம் நன்கு புலப்படவில்லை. ஒருகால் வாணிகம் காரணமாக அந்நாட்டில் தங்கியிருந்த தமிழ் மக்கள் உரிமைகளைக் காப்பாற்றும் பொருட்டு இராசேந்திர சோழன் அப்படையெடுப்பைத் தொடங்கி யிருத்தல் கூடும். அஃது எவ்வாறாயினும், தமிழ் மக்களின் வாணிக வளர்ச்சியின் பொருட்டு அப்படையெழுச்சி நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்று கொள்வது பொருந்தும் எனலாம். ஸ்ரீவிசய நாட்டைச் சோழ இராச்சியத்திற்கு உட்பட்ட தாகச் செய்து அந்நாட்டு வேந்தனைத் தனக்குக் கப்பஞ் செலுத்தும் சிற்றரசனாகச் செய்யவேண்டும் என்ற எண்ணம் இராசேந்திரனுக்கு இருந்ததா என்பது தெரியவில்லை.

1. The Cholas, Vol. I, p. 254 (First Edition).

2. The Larger Leiden Plates of Rajaraja I .Ep. Ind., Vol. XXII, No. 34.