உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

163

இவனுக்குச் சைவாசாரியராக விளங்கியவர் சர்வசிவ பண்டிதர் ஆவார். இச்செய்தி, ஆசாரிய போகமாக இவருக்கு இரண்டாயிரங் கல நெல் ஆண்டு தோறும் அளிக்குமாறு இவன் செய்துள்ள ஏற்பாட்டினால் நன்கு வெளியாகின்றது. அன்றியும், சிவநெறியின் அறுவகைப் பிரிவுகளுள் ஒன்றாகிய காளா முகத்தைச் சார்ந்த லகுளீச பண்டிதரும் இவனால் ஆதரிக்கப் பட்டனர் என்று தெரிகிறது.

இவன் சைவ சமயத்தில் பெரிதும் ஈடுபாடுடையவனாய் வாழ்ந்து வந்தவனெனினும் பிற சமயங்களிடத்தில் சிறிதும் வெறுப்புடையவனல்லன். அன்றியும், புறச் சமயங்களையும் மதித்து அவற்றை அன்புடன் ஆதரித்தும் வந்தனன் எனலாம். நாகப்பட்டினத்தில் கடாரத்தரசனால் எடுப்பிக்கப் பெற்ற புத்த கோயிலுக்குப் பள்ளிச்சந்தமாக இவன் தந்தை அளித்த ஆனை மங்கலம் என்னும் ஊர் இவன் ஆட்சிக் காலத்தில்தான் சாசன மூலமாக அதற்கு வழங்கப் பட்டது. இதனால், இவன் எல்லாச் சமயங்களையும் ஆதரித்து வந்தனன் என்பது இனிது விளங்குதல் காண்க.

இனி, நம் இராசேந்திர சோழனுக்கு மனைவிமார் ஐவர் இருந்தனர் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. அன்னோர், முக்கோக்கிழானடிகள்', அரிந்தவன்மாதேவி", வானவன் மாதேவி, வீரமாதேவி, பஞ்சவன்மாதேவி' என்போர். அவர்களுள் வானவன் மாதேவிக்குத் திரிபுவனமாதேவி என்னும் மற்றொரு பெயரும் உண்டு. அவர்களுள் பட்டத்தரசியாக விளங்கியவள் யார் என்பது புலப்படவில்லை.

இவ்வேந்தற்கு மக்கள் பலர் உண்டு. அவர்களுள், இவனுக்குப் பிறகு சக்கரவர்த்தியாக வீற்றிருந்து அரசாண்டவன் முதல் இராசாதி

1. S. I. I. Vol. II, No. 20.

2. Ep. Ind., Vol. XXII, No. 34.

3. Ins. 73 of 1921.

4. Ins. 632 of 1909.

5.S.I.I., Vol. V, No. 639.

6. Ins. 260 of 1915.

7. Ins. 464 of 1918.