உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

187

வேறு சில சிறப்புப் பெயர்களும் அந்நாளில் இவனுக்கு வழங்கி யுள்ளன என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. அவை: சயங்கொண்ட சோழன், ஆகவமல்ல குலாந்தகன், கல்யாண புரங்கொண்ட சோழன், வீரராசேந்திரவர்மன் என்பனவாம். இவன் பல அரசர்களை வென்று அசுவமேதம் செய்து அவர்கள் வணங்க வீற்றிருந்த காரணம்பற்றிச் சயங்கொண்டசோழன் என்னும் சிறப்புப் பெயர் எய்தினான்.1 மேலைச்சளுக்கியர் தலைநகரை எறிந்து அதனைக்கைப்பற்றி அங்கு வீராபிடேகஞ் செய்து கொண்டமையால் கல்யாணபுரங் கொண்ட சோழன்” என்று வழங்கப்பெற்றனன்.ஆகவமல்ல குலாந்தகன்" என்பது ஆகவமல்லன் குலத்திற்கு யமனைப்போன்றவன் என்று பொருள்படும். இவன் அவ்வேந்தனுக்கும் அவன் மக்களுக்கும் அடிக்கடி இன்னல் விளைத்து வந்தமைபற்றி இவனுக்கு அப்பட்டம் வழங்கியதாதல் வேண்டும். வீரராசேந்திரன் என்பது இவன் தன் வாழ்நாளில் பெருவீரனாகத் திகழ்ந்தமையால் எய்திய சிறப்புப்பெயர் எனலாம்.

இவன், தன் உடன்பிறந்தார்க்கும் புதல்வர்க்கும் தான் வென்ற நாடுகளில் ஆட்சியுரிமை வழங்கி அவர்கள் அந்நாடு களில் அரசாண்டு வருமாறு ஏற்பாடு செய்தான் என்றும் தன் வாழ்நாளில் பரிமேத வேள்வி புரிந்து சிறப்பெய்தினான் என்றும் இவன் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவனுக்குக் கங்கை கொண்ட சோழபுரமே தலைநகராயிருந்தது. இவன் பட்டத் தரசி, திரைலோக்கிய முடையாள் ஆவள். உலகுடைய பிராட்டி என்னும் ஒரு மனைவி இவ்வேந்தனுக்கு இருந்தனள் என்பது கன்னியாகுமரிக் கல்வெட்டினால் அறியப்படுகின்றது.'

1. S. I. I., Vol. V, Nos. 520, 633 and 978. Ibid, Vol, VIII; Nos. 82, 199 and 680.

2. Ibid, Vol. V, No. 465; Ins. 258 of 1910.

9

3. தொண்டை மண்டலத்திலுள்ள ஆமூர்க் கோட்டம் இவன் காலத்தில் கல்யாணபுரங் கொண்ட சோழக் கோட்டம் என்று வழங்கிற்று. (Ins. 258 of 1910).

4. Ins. 188 of 1919.

5. S. I. I., Vol. V, No. 978.

6. Ins. 446 of 1918.

7. Travancore Archaeological Series, Vol. I, pp. 162-163.