உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




196

-

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 எனவே, முடக்காற்றுப் போர் நிகழ்த்திய சோழ மன்னருள் ராசமகேந்திரனும் ஒருவன் ஆவான். செங்கற்பட்டு ஜில்லா மதுராந்தகத்தைச் சார்ந்த பெரும்பேரூரிலுள்ள கல்வெட் டொன்று, 'முரட் சளுக்கியை முடக்காற்றில் முதுகுகண்டு முனிவாறி-இரட்டராச குலகாலன்-இகல் வீரராசேந்திரன்- புயங்கொண்டு பொது நீக்கி-ஆள்கின்ற சயங்கொண்ட சோழ மண்டலம்" என்று கூறுவதால் முடக் காற்றில் போர் புரிந்தவர் களுள் நம் இராசேந்திரன் தம்பியாகிய வீரராசேந்திரனும் ஒருவன் என்பது நன்கு வெளியாகின்றது. எனவே, இரண்டாம் இராசேந்திரன், இராசமகேந்திரன், வீரராசேந்திரன் ஆகிய மூவரும் முடக்காற்றில் நிகழ்ந்த போரை நேரில் நடத்தி வாகை சூடிய சோழமன்னர்கள் ஆவர்.

அவர்களுள், இராசமகேந்திரன் என்பான், நம் இராசேந்திர னால் இளவரசுப்பட்டம் கட்டப்பெற்றிருந்த இவன் முதற் புதல்வன் என்று சொல்லப்படுகிறது.' அவ் விராசமகேந்திரன் ஆகவமல்லனை முடக்காற்றில் முதுகாட்டி ஓடும்படி செய்த பெருவீரன் என்று அவன் கல்வெட்டுக்கள் உணர்த்தினும் அவனைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை. ஆயினும், பனுவலுக்கு முதலாய வேதநான்கிற்

பண்டுரைத்த நெறிபுதுக்கிப் பழைய தங்கள் மனுவினுக்கு மும்மடி நான்மடியாஞ் சோழன்

மதிக்குடைக்கீழ் அறந்தளிர்ப்ப வளர்த்த வாறும்

என்று கலிங்கத்துப் பரணியில்' குறிப்பிடப் பெற்றுள்ள மும்முடி சோழனே இராசமகேந்திரன் என்று கருதுவதற்கு இடமுளது. அன்றியும்,

'அப்பழநூல்

பாடரவத் தென்னரங்க மேயாற்குப் பன்மணியால்

ஆடரவப் பாயல் அமைத்தோனும் ’

1. Ibid, Vol. III, No. 84.

2. The Colas, Vol. I, pp. 316 and 317.

3. கலிங்கத்துப்பரணி, இராசபாரம்பரியம். பா.28.